districts

img

பாறை வெடியால் பாதிப்பு:  மக்கள் ஆவேசம்

செஞ்சி, ஜூலை 17- விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி, திண்டிவனத்திலி ருந்து திருவண்ணாமலை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இதில் ஒரு பகுதியாக செஞ்சி அருகே நாட்டார்மங்கலம் கூட்டு ரோடு அருகே புதிய பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. அந்த பாலத்தின் அருகே இருந்த பாறையை வெடிவைத்து தகர்த்தனர்.  அப்போது, அதன் அருகே இருந்த மின்மாற்றி மீது வெடி பட்டு, அந்த பகுதியில் மின்சாரம் தடை ஏற்பட்டது. மேலும் கற்கள் அருகே இருந்த கடைகள் மீதும் சிதறி விழுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த செஞ்சி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து கலைந்து போக செய்தனர். மேலும் 3 மணி நேரத்துக்கு பின்னரே அந்த பகுதிக்கு மின்சாரம் விநியோகம் கிடைத்தது.